மக்கள் வீட்டு தேவைக்காக வாங்கும் சமையல் எரிவாயு இலவச சிலிண்டர் இணைப்புக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அது பயனாளி அளித்துள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இனி சில முக்கிய மாற்றங்கள் வரவிருப்பதாக தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தில் மாற்றம் ஏற்பட்டு புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை பெருமளவு குறையும் என பலரும் நம்புகிறார்கள். இதனை சாத்தியமாக்க தற்சமயம் மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய சிலிண்டர் இணைப்புகள் வழங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு முன்பணம் செலுத்தும் முறையை சற்றே மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளதன. தற்போதைய நிலையில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் சிலிண்டர் இணைப்புக்கான முன்பணத்தை EMI மூலமாக வசூலித்து வருகின்றன. அமலுக்கு வரவிருக்கும் புதிய விதிமுறையின்படி முன் பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக ரூபாய் 1600 வசூலிக்கும் என கூறப்படுகிறது.

இதில் ஒரு வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கப்படுகிறது. இதன் மொத்த விலை 3,200 ரூபாய், இதில் மத்திய அரசு 1,600 ரூபாயை மானியமாக அளிக்கிறது. மீதமுள்ள 1,600 ரூபாயை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் முன் பணமாக கொடுக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த தொகையை சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து எண்ணெய் விநியோக நிறுவனங்கள் வசூலித்து கொள்கின்றனர்.