கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிமெண்ட் சில்லறை விலை மூட்டைக்கு ரூ.10-15 வரை உயர்ந்தது. அதை தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் மேலும் ரூ.15-20 உயர வாய்ப்புள்ளது என்று தெரிகிது. ஆக நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் சில்லறை விலை ரூ.400 என்று இதுவரை இல்லாத புதிய உச்சம் தொடும் என்கின்றனர். இந்த அதிரடி உயர்வுக்கு காரணம் இடுபொருட்களான நிலக்கரி, டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு என்று கிரிசில் நிறுவனம் கூறுகிறது. சிமென்டின் விற்பனை மதிப்பு 11% லிருந்து 13% வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டுக்கு பின் தேவை அதிகரித்திருக்கும் சிமெண்ட்

கிரிசில் ஆராய்ச்சி இயக்குனர் இஷா சவுத்திரி கூறுகையில் “கோவிட்டின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் உள்கட்டமைப்பு, வீடு மற்றும் தொழிற்சாலை கட்டுமானம் போன்றவற்றிற்கு சிமென்டின் தேவைகள் அதிகரித்துள்ளன. இது சிமெண்ட் உற்பத்தி அளவை வேகமடையச்செய்வதோடு அதன் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் இதன் வளர்ச்சி 20% ஆகவும், இரண்டாம் பாதியில் 3-5% மிதமாகவும் இருந்தது” என்றார்.

பிராந்திய வாரியாக விற்பனையான சிமெண்ட் விலை ஒரு பார்வை

இந்தியாவின் தெற்கில் கடந்த அக்டோபரில் (அதற்கு முந்தய மாதத்தை விட) சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.54 அதிகரித்தது. மத்திய பிராந்தியத்தில் ரூ.20 உயர்ந்தது. தேவைகள் அளவுடன் இருந்ததால் வடக்கே ரூ.12 மட்டும் உயர்ந்தது. தெற்கு பிராந்தியத்தின் முக்கிய வெளிச்செல்லும் பகுதியான மேற்கில் ரூ.10 அதிகமாகவும் கிழக்கில் மிகவும் மிதமாக ரூ.5-ம் உயர்ந்தது.

நடப்பு நிதியாண்டில் டன் ஒன்றுக்கு ரூ.350-400 ஆகும் சில்லறை விற்பனை விலை

சில்லறை விற்பனையில் உயர்ந்திருக்கும் சிமென்டின் விலை அதன் உற்பத்தியாளர்களின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் சில்லறை அல்லாத சேனல்களுக்கு விற்பனை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக பான்-இந்தியா சிமென்ட் உணர்தல் வருடத்திற்கு 7-8% உயர்ந்து , இந்த நிதியாண்டில் டன் ஒன்றுக்கு ரூ. 350-400 ஆகலாம் என்று கருதப்படுகிறது.

CRISIL ரேட்டிங்ஸ்

CRISIL ரேட்டிங்ஸ் லிமிடெட்டின் இணை இயக்குனர் அங்கித் கேடியா கூறுகையில் “அக்டோபர் மாத விலை மட்டத்திலிருந்து நிலக்கரி மற்றும் டீசல் விலைகள் சற்றே மிதமாக்கப்பட்டு அதன் செலவு அழுத்தம் குறையக்கூடும். உற்பத்தி செலவில் அர்த்தமுள்ள பிரதிபலிப்பை ஏற்படுத்த 2-3 காலாண்டுகள் ஆகும். எனவே, இந்த நிதியாண்டில் சிமென்ட் தயாரிப்பாளர்களின் செயல்பாட்டு லாபம் அல்லது Ebitda ஒரு டன்னுக்கு ரூ.100-150 அல்லது 300-400 அடிப்படை புள்ளிகள் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், முழுமையான இலாபங்கள் பாதிக்கப்படாது, ஏனெனில் அதிக அளவு மார்ஜினில் மிதமான தாக்கத்தை ஈடுசெய்யும்.” என்று கூறினார்