கடன் தடை விவகாரத்தில் “பல துறைகளுக்கு உறுதியான ஒரு கருத்தினை கொண்டு வர” மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது.

கடன் தடைத் திட்டம்:

வங்கிகள் கடன் வாங்குபவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு வற்புறுத்தலையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் உயர் நீதிமன்றம் முன்பு குறிப்பிட்டிருந்தது.

இரண்டு வாரங்களில் என்ன நடக்க உள்ளது? மத்திய அரசுக்கு நாங்கள் நேரம் கொடுக்கிறோம். ஆனால் உறுதியான ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம் என உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் ஒரு திட்டத்தை கொண்டு வர கடைசி ஒரு வாய்ப்பு என்று உச்ச நீதிமன்றம் தெரிந்துள்ளது. உச்சநீதிமன்றம் தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள EMI-க்கு வட்டி தள்ளுபடி செய்யக் கோரும் மனுக்களை விசாரித்தது. இது கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை அடுத்து தற்போது உள்ள கடன் வாங்குவோர்களுக்கு சுமையை குறைக்க RBI அறிமுகப்படுத்தியது.

இதற்கான பரிசீலனைகள் மிக கட்டத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். நிவாரணத்திற்காக அரசாங்க வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து ஆலோசித்து வருகிறது. மேலும் மூன்று முறை இதற்கான சந்திப்புகள் நடந்துள்ளது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது பல சங்கங்களின் விசாரணையின் ஒரு பகுதி ஆகும். மனுதாரர்களின் வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யக் கூறுகையில், வட்டியை தள்ளுபடி செய்வது என்பது வங்கியை பலவீனப்படுத்தும் எனவும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கும் எனவும் அரசாங்கம் கருதுகின்றது.

Author – Gurusanjeev Sivakumar