கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஒரு சில மாதங்களில் இன்னும் சரிவடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஜிடிபி:

2020-2021 ஆண்டுக்கான முதல் காலாண்டின் ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்திய ஜிடிபி 23.9 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019-2020 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5.3 சதவீதம் ஜிடிபி உயர்ந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே கடும் சரிவை சந்தித்துள்ளது. 2019-2020 ஆம் நிதி ஆண்டின் மொத்த ஜிடிபி 4.2% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கின் காரணமாக ஜிடிபி சரிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணத்தினால் நம் நாடு அதிகாரப்பூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதற்கு முன்பு G20 நாடுகளில் பிரிட்டைன் தான் 21.7% சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரிட்டைனைக் காட்டிலும் இந்தியா நாட்டின் ஜிடிபி 23.9% உள்ளது. G20 நாடுகளில் தற்போது இந்திய நாடு தான் ஜிடிபி வீழ்ச்சியடைந்து மிகவும் மோசமான பொருளாதார நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புள்ளியில் நிபுணர் கூறுகையில், பொருளாதார நிலை கோவிட்-19 வைரஸின் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக சீர்குலைந்து உள்ளதாக தெரிவித்தார். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதன் காரணத்தினால் வேலையிழந்து உள்ளார்கள்.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில் கோவிட்-19 பரவல் சற்று அதிகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையின்படி இந்தியாவில் 5.64 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 90,050 பேர் உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில் நாடுகளைக் விட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar