இந்தியாவில் அதிக மதிப்பு கொண்டுள்ள முதல் டாப் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குச் சந்தை மூலதனத்தில் ஒட்டு மொத்தமாக கடந்த வாரத்தில் ரூ.91,699 கோடியை இழந்துள்ளது. குறிப்பாக, அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ்ட், ஹெச்டிஎப்சி, ஏர்டெல், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்கள் கடும் இழப்பினை சந்தித்துள்ளது. அதேபோல், பஜாஜ் பைனான்ஸ், கொடாக் மகிந்த்ரா பேங்க், ஹெச்டிஎப்சி பேங்க், இந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய சந்தை மதிப்பானது ரூ.60,829.21 கோடி சரிந்து ரூ.12,23,416.97 கோடியாக குறைந்து உள்ளது. அதேபோல், ஹெச்டிஎப்சி நிறுவனத்தினுடைய சந்தை மூலதனம் ஆனது ரூ.13,703.75 கோடி சரிந்து ரூ.4,05,996.11 கோடியாக குறைந்து உள்ளது.

மேலும், ஏர்டெல் நிறுவனத்தினுடைய சந்தை மூலதனம் ஆனது ரூ.11,020.23 கோடியும், ஐசிஐசிஐ வங்கியின் மூலதனம் ஆனது ரூ.5,090.54 கோடியும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தினுடைய மூலதனம் ஆனது ரூ.1,055.27 கோடியும் குறைந்து உள்ளது.

குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கியினுடைய சந்தை மூலதனம் ஆனது ரூ.20,482.86 கோடி உயர்ந்து உள்ளது. அதேபோல், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினுடைய மூலதனம் ஆனது ரூ.11,181.01 கோடியும், டிசிஎஸ் நிறுவனத்தினுடைய மூலதனம் ஆனது ரூ.7,335.91 கோடியும், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தினுடைய மூலதனம் ஆனது ரூ.4,135.22 கோடியும், கொடாக் மகிந்த்ரா பேங்கினுடைய மூலதனம் ஆனது ரூ.2,538.64 கோடியும் உயர்ந்து உள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் ஆனது 267.47 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. அதாவது, சென்செக்ஸ் 0.60% ஆனது உயர்ந்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar