கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரமும் நாட்டு மக்களினுடைய வாழ்வாதாரமும் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சலுகை:

எனவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினை மீட்டெடுக்கின்ற வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சிறப்புப் பொருளாதாரச் சலுகை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 13-ம் தேதி அன்று அறிவித்தார். அதற்கு முன்னதாக மார்ச் மாதத்தின் இறுதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய பொருளாதாரச் சலுகைகளை அறிவித்திருந்தார்.

அதில், 3 மாதங்களுக்கான நிதியுதவிகள், பெண்களுக்கான சிறப்பு நிதி, இலவச உணவு தானியம், இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட அறிவிப்புகளானது முதல் பொருளாதாரச் சலுகைகளில் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில், மீண்டும் ஒரு பொருளாதாரச் சலுகையை மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றின் பாதிப்புகளானது குறைந்து ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தாலும், மக்களுடைய இயல்பு வாழ்க்கையானது இன்னும்கூட முழுமையாக திரும்பவில்லை. வேலை இல்லாத சூழ்நிலை மற்றும் வருவாயின் பாதிப்புகள் நீடித்துக் கொண்டு தான் உள்ளது.

அதே போல் நாட்டினுடைய பொருளாதாரம் கூட இன்னும் ஏற்றப் பாதைக்குத் திரும்பவில்லை என்று தான் கூற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் மற்றொரு பொருளாதாரச் சலுகையானது மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளார்.

நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவது, உள்நாட்டில் உள்ள உற்பத்தியை அதிகரிப்பது, தொழில் நிறுவனங்களினுடைய வருவாயினை அதிகரிக்க செய்வது, தொழிலாளர்களினுடைய நலன் காப்பது போன்றவற்றினை ஒரு இலக்காய் கொண்டு இந்த பொருளாதாரச் சலுகையானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பல துறையினைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஆனது பொருளாதாரச் சலுகைகள் மற்றொரு முறை அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துதிருந்தன. ஆனால், இந்த நிதி ஆண்டில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக கடன் வாங்கப்போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த முறை அறிவிக்கப்பட உள்ள சிறப்புப் பொருளாதாரச் சலுகையானது கடந்த முறையை விட மிகவும் குறைவாகத் தான் இருக்கும் என கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar