தொழிலாளர் சங்க போராட்டம் காரணமாக பெங்களூரில் உள்ள டொயோட்டா உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் மூடியுள்ளது. பிடதியில் 432 ஏக்கரில் உள்ள அந்த ஆலையில் இன்னோவா, கேம்ரே, பார்ச்சூனர் உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்படுகின்றது.

டொயோட்டா ஆலை மூடல்:

ஆண்டு ஓன்றுக்கு 3 இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்த ஆலையில், ஆறாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நிறுவனத்தினுடைய கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக, ஒரு ஊழியரை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

அதைக் கண்டித்து தொழிலாளர் சங்கம் ஆனது பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தியதன் காரணமாக, ஆலை முழுவதும் மூடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் ஆலைகள் மூடப்படுவது தொடர்ச்சியாக நடந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வராது என நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

Author – Gurusanjeev Sivakumar