நம் நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் ஆனது அதிகரித்து வரும் நிலையில், சில மாதமாக சற்று ஆறுதல் அளிக்கும் விதம் ஆக வேலை இன்மை விகிதம் ஆனது சில மாதமாகவே பெரிய அளவில் மாற்றமின்றி காணப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் வேலை இன்மை விகிதம் ஆனது கடந்த மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 1.04% ஆனது ஏற்றம் அடைந்து, 6.98% ஆக அதிகரித்து உள்ளதாக CMIE அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் 6.67% இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், விவசாயத்துறையில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வேலை இன்மையின் விகிதம் ஆனது சற்று அதிகரித்துள்ளது. மேலும் இதில் ஒரு நல்ல தகவல் என்னவென்றால் நகரங்களில் வேலை இன்மை விகிதம் 7.15% ஆக குறைந்து உள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 8.45% ஆக இருந்தது குறிப்பிடதக்கது.

நாட்டில் கோவிட்-19 தொற்றின் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரங்கு ஆனது கடைபிடிக்கப்பட்டு வந்த இந்நிலையில், கடந்த ஆண்டின் தொடக்க நிலையில் வேலை இன்மை விகிதமானது மிகவும் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்விற்கு பின்பு இந்த விகிதம் ஆனது படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாத காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதுமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, இந்தியாவினுடைய தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

உள்நாட்டு உற்பத்திகள் அனைத்தும் பாதிப்படைந்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் வர்த்தகம் கூட பின்னடைவினைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளும் குறைந்தது.

இந்நிலையின் காரணமாக நிறுவனங்களினுடைய வருவாய் ஆனது குறைந்து, வேலை வாய்ப்பிலும் பின்னடைவு ஏற்பட்டது என்று தான் கூறவேண்டும். இதன் காரணமாக இந்தியாவில் வேலை இன்மை விகிதமானது அதிகரித்தது. இருப்பினும் கடந்த சில மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது அதிகரித்து உள்ளது என்று கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar